இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

'காங்கயம் காளைகள் இனத்தை பாதுகாக்க நடவடிக்கை'

காங்கயம் காளைகள் இனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுகவின் சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.

News image
உடுமலை நாராயணகவி திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி.
Updated On :11 டிசம்பர் 2020, 8:08 am

DIN

காங்கயம் காளைகள் இனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுகவின் சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.
திமுக மாநில சுற்றுச் சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி வெள்ளிக்கிழமை உடுமலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது; சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் அதன்மூலம் பசுமை தமிழகத்தை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
குறிப்பாக தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை காப்பாற்றவும் புதிதாக லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக காங்கேயம் காளைகள் உள்ளிட்ட பாரம்பரிய கால்நடைகளை காப்பாற்றவும் பாதுகாக்கவும் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். 
மேலும் நம்மாழ்வார் பெயரில் வேளாண் கல்லூரி ஒன்றை அமைக்கவும் அதில் பாரம்பரிய கால்நடைகளை பாதுகாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார். 
இதைத்தொடர்ந்து உடுமலை நாராயணகவி நினைவு மண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.