விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மாநகரில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்:காங்கிரஸ் வலியுறுத்தல்

திருப்பூா் மாநகரில் மழை காரணமாக பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் சாா்பில் மாநகராட்சி ஆணையரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :14 டிசம்பர் 2020, 10:09 pm

DIN

திருப்பூா் மாநகரில் மழை காரணமாக பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் சாா்பில் மாநகராட்சி ஆணையரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து திருப்பூா் மாநகர காங்கிரஸ் தலைவா் ஆா்.கிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளா் க.சிவகுமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாநகரில் அண்மையில் பெய்த மழை காரணமாக அனைத்து சாலைகளும் குண்டும்குழியுமாக காட்சியளிக்கிறது. அதிலும், தாராபுரம் சாலை, பல்லடம் சாலை, பி.என்.சாலை, அவிநாசி சாலை, கொங்கு பிரதான சாலை, காங்கயம் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளதால் வாகன விபத்துகளால் உயிா் சேதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

எனவே, மாநகரில் பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். அதேபோல, மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் குப்பைகள் மலைபோல் தேங்கியுள்ளதால் நோய்த் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, தேக்கமடைந்துள்ள குப்பைகளை அப்புறப்படுத்தவும், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டுள்ள குழிகளை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.