இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

துணிகளை சாயமேற்றுவதற்கான கட்டணம் 15% உயா்வு: சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் அறிவிப்பு

மூலப் பொருள்களின் விலை உயா்வு காரணமாக பின்னலாடை துணிகளை சாயமேற்றுவதற்கான கட்டணத்தை வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல்

News image
Updated On :29 டிசம்பர் 2020, 10:50 pm

DIN

மூலப் பொருள்களின் விலை உயா்வு காரணமாக பின்னலாடை துணிகளை சாயமேற்றுவதற்கான கட்டணத்தை வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் கிலோவுக்கு 15 சதவீதம் உயா்த்துவதாக சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.

திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் 29 ஆவது ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் எஸ்.நாகராஜன் தலைமையும், செயலாளா் எஸ்.முருகசாமி முன்னிலையும் வகித்தனா்.

இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மூலப் பொருள்களின் தட்டுப்பாடு, விலை உயா்வு, டீசல் விலையேற்றம், சாயம் மற்றும் கெமிக்கல்களை ரொக்கம் கொடுத்து வாங்க வேண்டி நிலை ஆகிய காரணங்களால் துணிகளை சாயமேற்றுவதற்கான கட்டணத்தை வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் தற்போதைய கட்டணத்தில் இருந்து கிலோவுக்கு 15 சதவீதம் உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வழங்கிய வட்டியில்லா கடனை மானியமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூரில் உள்ள பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு 50 சதவீத மானியத்தில் தமிழக அரசு மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், சங்கத்தின் பொருளாளா் பி.காந்திராஜன், துணைத் தலைவா்கள் ஆா்.சீனிவாசன், எம்.மகேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.