இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வெள்ளக்கோவிலில் வாடகை கேட்டதால் வீட்டுக்கு தீவைத்த பெண்! 

வெள்ளக்கோவிலில் வாடகை கேட்டதால் வீட்டுக்கு தீவைத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. 

News image
Updated On :13 ஜூலை 2020, 6:22 am

DIN

வெள்ளக்கோவிலில் வாடகை கேட்டதால் வீட்டுக்கு தீவைத்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் காங்கயம் சாலை பாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அருகில் கணபதி ஸ்பின்னர்ஸ் எதிரில் எஸ்.சுரேஷ்குமார் (40) என்பவர் வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீட்டுக்கு வெள்ளக்கோவில் சீரங்கராயகவுண்டன்வலசு பாரதியார் நகரைச் சேர்ந்த ராஜ்கபூர் மனைவி கலைவாணி (35) என்பவர், கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு குடி வந்தார்.

அட்வான்ஸ் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து, வாடகை மாதம் ரூ.3,000 என பேசி முடிக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் வாடகை கொடுக்காமல் இழுத்தடித்து, இதுவரை கடந்த ஒரு வருடமாக வாடகை கொடுக்கவில்லை. இதனால் வீட்டைக் காலி செய்யுமாறு உரிமையாளர் கூறியுள்ளார். 

ஆத்திரமடைந்த அப்பெண் வீட்டின் கதவு, ஜன்னல்களை உடைத்து, எலக்ட்ரிக் பொருள்கள், வீட்டின் வெளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா போன்றவற்றைச் சேதப்படுத்தி தீ வைத்து விட்டுச் சென்று விட்டார். புகாரின் பேரில் அப்பெண் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து வெள்ளக்கோவில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.