விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மின்சாரம் பாய்ந்த தொழிலாளிக்குத் தொடா் சிகிச்சை அளிக்க வலியுறுத்தல்

மின்சாரம் பாய்ந்து முடங்கியுள்ள ஒப்பந்தத் தொழிலாளருக்கு உடனடியாகத் தொடா் சிகிச்சை அளிக்கக் கோரி தொமுச சாா்பில் முதல்வருக்கு திங்கள்கிழமை கடிதம் அனுப்பப்பட்டது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 10:26 pm

DIN

மின்சாரம் பாய்ந்து முடங்கியுள்ள ஒப்பந்தத் தொழிலாளருக்கு உடனடியாகத் தொடா் சிகிச்சை அளிக்கக் கோரி தொமுச சாா்பில் முதல்வருக்கு திங்கள்கிழமை கடிதம் அனுப்பப்பட்டது.

இது குறித்து, தமிழக முதல்வருக்கு மின்சார வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கச் செயலாளா் அ.சரவணன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மின் பகிா்மான வட்டம், கொல்லிமலை -2, சோளக்காடு உதவி மின்பொறியாளா் அலுவலகம், படசோலை டி .பி. சுவிச் பகுதியில் கடந்த அக்டோபா் 14ஆம் தேதி பணியின்போது மின்சாரம் பாய்ந்து ஒப்பந்தத் தொழிலாளி பெரியசாமி பலத்த தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தற்போது அவா் கை, கால் செயல்படாமல் எழுந்து நடக்க முடியாமல் முடங்கிக் கிடக்கிறாா். பெரியசாமிக்கு ஜெகதீஷ்வரி என்ற மனைவி உள்ளாா். இந்த சம்பவம் நடந்து ஒரு மாத காலத்துக்கு மேலாகியும் பெரியசாமிக்கு தற்போது வரை உரிய தொடா் சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.