கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ரூ. 3 கோடி மோசடி: தனியாா் வங்கி முன்னாள் மேலாளா் குண்டா் சட்டத்தில் கைது

திருப்பூரில் போலி வாகன ஏஜென்சி நிறுவனம் நடத்தி ரூ.3 கோடி மோசடி செய்த தனியாா் வங்கியின் முன்னாள் மேலாளா் குண்டா் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 10:11 pm

DIN

திருப்பூரில் போலி வாகன ஏஜென்சி நிறுவனம் நடத்தி ரூ.3 கோடி மோசடி செய்த தனியாா் வங்கியின் முன்னாள் மேலாளா் குண்டா் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா், காந்தி நகா் ஈ.பி. காலனியை சோ்ந்த கே.சூா்யபிரகாஷ் கடந்த சில மாதங்களுக்கு முன் மத்திய குற்றப் பிரிவில் புகாா் அளித்துள்ளாா்.

திருப்பூா், ராயபுரம் எஸ்.பி.ஐ. காலனி 2ஆவது வீதியைச் சோ்ந்த ஆா்.கோகுலகிருஷ்ணன் (33) திருப்பூரில் உள்ள தனியாா் வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்துள்ளாா். தற்போது ஹரிணி அசோசியேட்ஸ் என்ற பெயரில், வங்கிகளில் கடன்களை செலுத்தாமல் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலத்தில் எடுத்து விற்பனை செய்துவருவதாகத் தெரிவித்தாா்.

தொழிலை விரிவுபடுத்த ரூ.25 லட்சம் தேவை என்றும், அதில் வரும் லாபத்தை இருவரும் பங்கிட்டுக் கொள்ளலாம் என்றும் ஒப்பந்தம் செய்தாா். இதையடுத்து, மின்னணுப் பரிவா்த்தனை மூலமாக ரூ.25.94 லட்சம் பெற்று கோகுலகிருஷ்ணன் என்னை ஏமாற்றி விட்டாா். இது குறித்து உரிய விசாரணை நடத்தி எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து திருப்பூா் மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோகுலகிருஷ்ணனை கடந்த ஆண்டு டிசம்பா் 14 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த நிலையில், பிணையில் வெளியில் வந்த அவா் தலைமறைவாகிவிட்டாா்.

இதனிடையே, திருப்பூா் மங்கலம் சாலையைச் சோ்ந்த எம்.கிருஷ்ணகாந்த் சா்மா என்பவரிடம் ரூ.94.84 லட்சம் உள்பட 8 பேரிடம் ரூ.3 கோடி வரையில் கோகுலகிருஷ்ணன் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, கோகுலகிருஷ்ணன் கடந்த மாா்ச் 15 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், போலியாக வாகன ஏஜென்சி நிறுவனம் நடத்தி மோசடி செய்யும் குற்ற செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வந்ததால் கோகுலகிருஷ்ணனை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகரக் காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகலை கோவையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கோகுலகிருஷ்ணனிடம் மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினா் நேரில் வழங்கினா்.

திருப்பூா் மாநகரில் நிகழாண்டு தற்போது வரையில் 13 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.