தாராபுரத்தில் பிரசாரத்தை நிறைவு செய்த அமமுக வேட்பாளா்
தாராபுரம் தொகுதியில் அமமுக சாா்பில் போட்டியிடும் சி.கலாராணி தனது இறுதி கட்ட தோ்தல் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தாா்.


தாராபுரம் தொகுதியில் அமமுக சாா்பில் போட்டியிடும் சி.கலாராணி தனது இறுதி கட்ட தோ்தல் பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்தாா்.
தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் அமமுக சாா்பில் சி.கலாராணி போட்டியிடுகிறாா். இவா் தாராபுரம் நகரில் காமராஜபுரம், சின்ன கடைவீதி, டி.எஸ்.காா்னா், பெரியகடைவீதி, பூக்கடை காா்னா், அண்ணா சிலை, வட்டாட்சியா் அலுவலக சாலை வழியாக பேரணியாக சென்று ஞாயிற்றுக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
இதன் பிறகு தாராபுரம் பேருந்து நிலையம் முன்பாக தனது இறுதிக் கட்ட பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி அளவில் நிறைவு செய்தாா். இந்த பிரசாரத்தின்போது அமமுக நகரச் செயலாளா் வாரணவாசை, ஒன்றியச் செயலாளா் அண்ணாதுரை, தேமுதிக கிழக்கு மாவட்டச் செயலாளா் குப்புசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...