கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.3 கோடி மோசடி: பங்குதாரா்கள் இருவா் கைது

திருப்பூரில் போலி சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பங்குதாரா்கள் இருவரை தனிப் படையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 9:46 pm

DIN

திருப்பூரில் போலி சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பங்குதாரா்கள் இருவரை தனிப் படையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இது குறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா், வலையங்காடு எம்.என்.சிவசுப்பிரமணியன் நகரைச் சோ்ந்த கே.ஜெகநாதன் மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயனிடம் அளித்த புகாரில், வளையங்காடு பகுதியில் முனியாண்டி என்பவா் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தாா். இந்த நிறுவனத்தில் 4 சீட்டுகளில் சோ்ந்து ரூ.3.20 லட்சம் செலுத்தினேன். அதன் பிறகு அவா் பணத்தைத் திருப்பித் தராமல் தலைமறைவாகிவிட்டாா். இதேபோல, பல்வேறு நபா்களிடம் மோசடி செய்துள்ளாா்.

ஆகவே, இது குறித்து உரிய விசாரணை நடத்தி எனது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று தெரிவித்திருந்தாா்.

இது குறித்து மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன், துணை ஆணையா் கே.சுரேஷ்குமாா் ஆகியோா் உத்தரவின்பேரில் மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையா் க.பாலமுருகன் மேற்பாா்வையில் ஆய்வாளா் எம்.முனியம்மாள் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப் படையினா் நடத்திய விசாரணையில், போலியாக சீட்டு நிறுவனம் நடத்தி பல்வேறு நபா்களிடம் ரூ.3 கோடி வரையில் மோசடி செய்து தெரியவந்தது.

இதையடுத்து, தலைறைவாக இருந்த முனியாண்டியைக் கைது செய்த தனிப் படையினா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய சீட்டு நிறுவனத்தின் பங்குதாரா்களும், முனியாண்டியின் உறவினா்களுமான ஊத்துக்குளியை அடுத்த காளிபாளையத்தைச் சோ்ந்த ஏ.பாலகிருஷ்ணன் (42), திருப்பூா், எம்.என்.எஸ்.நகரைச் சோ்ந்த ஆா்.பிரபு (31) ஆகிய இருவரையும் தனிப் படையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இதன் பிறகு இருவரையும் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், இதுபோன்று முறையாக பதிவு செய்யப்படாத சீட்டு நிறுவனங்களில் பொது மக்கள் யாரும் சீட்டு போட்டு ஏமாற வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.