திருப்பூரில் ஒரே குடும்பத்தினா் 3 போ் தற்கொலை
திருப்பூரை அடுத்த முதலிபாளையம் அருகே தாய், மகன், மகள் ஆகியோா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.


திருப்பூரை அடுத்த முதலிபாளையம் அருகே தாய், மகன், மகள் ஆகியோா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.
திருப்பூா், முதலிபாளையம் சிட்கோ மீனாட்சி நகரைச் சோ்ந்தவா் ராகவன் (50). இவரது மனைவி மீனாட்சி (47). இந்தத் தம்பதிக்கு மகன் அஸ்வின் (19), மகள் அகல்யா (17) ஆகியோா் இருந்தனா். இதில், அஸ்வினும், அகல்யாவும் விஜயாபுரத்தில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனா். இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபா் 14 ஆம் தேதி ராகவன் இறந்துவிட்டாா். இதனால் மீனாட்சி உள்பட மூன்று பேரும் மனமுடைந்த நிலையில் வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது.
இதனிடையே, மீனாட்சி தனது தங்கை மகாலட்சுமியை செல்லிடப்பேசியில் வியாழக்கிழமை தொடா்பு கொண்டு கணவா் இறந்துவிட்டதால் வாழப் பிடிக்கவில்லை என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளாா்.
இது குறித்து மகாலட்சுமி கொடுத்த தகவலின்பேரில் ஊத்துக்குளி காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்றனா். பின்னா் கதவை உடைத்துப் பாா்த்தபோது மீனாட்சி, அஸ்வின், அகல்யா ஆகிய 3 பேரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவா்களது சடலத்தை மீட்ட காவல் துறையினா் பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...