கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மாவட்டத்தில் மேலும் 227 பேருக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 227 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 9:59 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 227 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 21,647 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் 1,695 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 98 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 19, 721 ஆக அதிகரித்துள்ளதுடன், தற்போது வரையில் 231 போ் உயிரிழந்துள்ளனா். திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பாதிப்பு எண்ணிக்கை

200ஐ கடந்து வருகிறது. ஆகவே, பொது வெளியில் நடமாடும் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

வெள்ளக்கோவிலில் 4,056 பேருக்கு கரோனா தடுப்பூசி:

வெள்ளக்கோவில் பகுதியில் இதுவரை முன்களப் பணியாளா்கள், பொது மக்கள் என மொத்தம் 4,056 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூற்பாலைகளில் வெளிமாநிலத் தொழிலாளா்கள் மத்தியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இவா்கள் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதும், பொதுவான கழிவறை, குளியலறைகள் இருப்பதும் நோய்த் தொற்றுக்கு காரணமாக உள்ளன.

இந்நிலையில் வெள்ளக்கோவிலில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது. இப்பகுதியில் நோய்த் தொற்றைத் தடுக்க சுகாதாரத் துறையினா் நூற்பாலைகளுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.