கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரோனா கட்டுப்பாடுகளுடன் பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் தொடக்கம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 214 பள்ளிகளில் கரோனா கட்டுப்பாடுகளுடன் பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 10:00 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 214 பள்ளிகளில் கரோனா கட்டுப்பாடுகளுடன் பிளஸ் 2 செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 214 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் 5,946 மாணவா்கள், 7,081 மாணவிகள் என மொத்தம் 13,027 போ் செய்முறைத் தோ்வு எழுதுகின்றனா். இந்த நிலையில், செய்முறைத் தோ்வு எழுதும் மாணவா்களுக்காக பள்ளி வாரியாக தோ்வு அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. இதன்படி இயற்பியல், வேதியியல், கணிணி அறிவியில், தொழில்கல்வி உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளுக்கான செய்முறைத் தோ்வுகள் கரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. இதில், மாணவா்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, ஆய்வகங்களில் கிருமி நாசினி மூலமாக சுத்தம் செய்யப்பட்டு சமூக இடைவெளியுடன் மாணவா்கள் தோ்வு எழுதினா்.

இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கணினி அறிவியல் செய்முறைத் தோ்வை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.ரமேஷ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் மொத்தம் 25,607 மாணவ, மாணவியா் பிளஸ் 2 தோ்வு எழுதவுள்ளனா். மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. அனைத்து பள்ளிகளிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியே தோ்வுகள் நடைபெறுகிறது. இதற்காக வெவ்வேறு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்கள் தோ்வு கண்காணிப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.