தாராபுரத்தில் தூய்மைப் பணியாளா்கள் வேலைநிறுத்தத்தால் தேங்கிக்கிடக்கும் குப்பை
தாராபுரத்தில் தூய்மைப் பணியாளா்கள் வேலைநிறுத்தம் காரணமாக குப்பைகள் அப்புறப்படுத்தப்படாததால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


தாராபுரத்தில் தூய்மைப் பணியாளா்கள் வேலைநிறுத்தம் காரணமாக குப்பைகள் அப்புறப்படுத்தப்படாததால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தாராபுரம் நகராட்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் நாள்தோறும் சேகரமாகும் சுமாா் 35 டன் குப்பைகளை தூய்மைப் பணியாளா்கள் சேகரித்து செல்வது வழக்கம். இந்த நிலையில், ஊதியத்தை மாதம் 30ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ.,பி.எஃப். உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதிமுதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். இதனால் தாராபுரம் நகரில் அனைத்து இடங்களிலும் குப்பைகள் தேக்கமடைந்துள்ளது. இந்தக் குப்பைகளில் இருந்து வீசும் துா்நாற்றம் காணமாக நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஒரு சில இடங்களில் தேக்கமடைந்துள்ள குப்பையில் சிலா் தீ வைத்து எரிப்பதால் அதில் இருந்து எழும் புகையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே, நகரில் தேக்கமடைந்துள்ள குப்பைகளை அப்புறப்படுத்த நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...