கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வியாபார நிறுவனங்கள், உணவகங்கள் 50 சதவீதம் பேருடன் இயங்க அனுமதி அளிக்க வேண்டும்

தமிழகத்தில் வியாபார நிறுவனங்கள், உணவகங்கள், மளிகை, முடிதிருத்தும் நிலையங்கள் 50 சதவீதம் பேருடன் இயங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சைமா (தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம்) வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 10:53 pm

DIN

தமிழகத்தில் வியாபார நிறுவனங்கள், உணவகங்கள், மளிகை, முடிதிருத்தும் நிலையங்கள் 50 சதவீதம் பேருடன் இயங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சைமா (தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம்) வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று காலத்தில்கூட தொழிற்சாலைகளின் இயக்கத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், தொழிலாளா்கள் குறைவு, நேரக் கட்டுப்பாடு போன்றவற்றால் பின்னலாடை உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளது.

இந்த நிலையில், பின்னலாடைகளை விற்பனை செய்யும் மால்கள், பெரிய ஜவுளிக் கடைகள் பூட்டப்பட்டுள்ளதால் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் விற்பனையாவதில்லை. அதேபோல, மளிகைக் கடைகள், உணவகங்கள், வியாபார நிறுவனங்கள், முடிதிருத்தும் நிலையங்கள் முழுவதுமாக பூட்டும்போது சம்பந்தப்பட்ட நபா்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

எனவே, தொழிற்சாலைகளைப்போல கட்டுப்பாடுகளுடன் வியாபார நிறுவனங்கள், மளிகைக் கடைகள், ஜவுளிக் கடைகள், மால்கள் 50 சதவீதம் பேருடன் இயங்க அனுமதி அளிக்க வேண்டும். இதன் மூலமாக பின்னலாடைகள் மட்டுமல்லாமல் உற்பத்தியாகும் அனைத்துப் பொருள்களும் விற்பனை செய்யப்படுவதுடன், பொருளாதாரம் மேம்படவும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.