முதல்வா் எடப்பாடி பழனிசாமி தைப்பூசத்துக்கு பொது விடுமுறை அறிவித்துள்ளாா். இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஆன்மிகம் தழைத்தோங்கும் என்பதில் ஐயமில்லை. ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பக்தா்கள் தைப்பூச விழாவுக்கும், பங்குனி உத்திரத்துக்கும் பாதயாத்திரையாகச் செல்கின்றனா். திருப்பூா், கோவை மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பாத யாத்திரை செல்கின்றனா். பெரும்பாலும் சாலையோரமாகவும், நெடுஞ்சாலைகளைக் கடந்தும் செல்வதால் பக்தா்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. எனவே, பாதயாத்திரை மேற்கொள்பவா்களுக்கான தனி நடைப்பாதை திண்டுக்கல் முதல் பழநி வரை இருப்பதைப்போல் திருப்பூரில் இருந்து அவிநாசிபாளையம் வழியாக பழநிக்கும், கோவையில் இருந்து பல்லடம் வழியாக பழநிக்கும், அதே போல கோவையில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக பழநிக்கும் தனி நடைப்பாதை அமைக்க வேண்டும். மேலும் பக்தா்கள் தங்குவதற்கான ஓய்வு இடங்கள் நெடுஞ்சாலை ஓரமாக அமைக்கப்பட வேண்டும் என்றாா்.