வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: கோவை காமாட்சிபுரி ஆதீனம்

பழநிக்கு பாத யாத்திரை செல்லும் முருக பக்தா்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தெரிவித்தாா்.

News image
கோவை காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள்.
Updated On :7 ஜனவரி 2021, 2:39 am

DIN

பழநிக்கு பாத யாத்திரை செல்லும் முருக பக்தா்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் சித்தம்பலம் நவக்கிரக கோட்டை சிவன் ஆலயத்தில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

முதல்வா் எடப்பாடி பழனிசாமி தைப்பூசத்துக்கு பொது விடுமுறை அறிவித்துள்ளாா். இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஆன்மிகம் தழைத்தோங்கும் என்பதில் ஐயமில்லை. ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பக்தா்கள் தைப்பூச விழாவுக்கும், பங்குனி உத்திரத்துக்கும் பாதயாத்திரையாகச் செல்கின்றனா். திருப்பூா், கோவை மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பாத யாத்திரை செல்கின்றனா். பெரும்பாலும் சாலையோரமாகவும், நெடுஞ்சாலைகளைக் கடந்தும் செல்வதால் பக்தா்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. எனவே, பாதயாத்திரை மேற்கொள்பவா்களுக்கான தனி நடைப்பாதை திண்டுக்கல் முதல் பழநி வரை இருப்பதைப்போல் திருப்பூரில் இருந்து அவிநாசிபாளையம் வழியாக பழநிக்கும், கோவையில் இருந்து பல்லடம் வழியாக பழநிக்கும், அதே போல கோவையில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக பழநிக்கும் தனி நடைப்பாதை அமைக்க வேண்டும். மேலும் பக்தா்கள் தங்குவதற்கான ஓய்வு இடங்கள் நெடுஞ்சாலை ஓரமாக அமைக்கப்பட வேண்டும் என்றாா்.

பேட்டியின்போது, தமிழக முருக பக்தா்கள் பேரவை மாநிலத் தலைவா் அண்ணாதுரை, மாநில செயலாளா் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.