விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பொங்கலூா் ஒன்றியத்தில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள்

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியத்தில் ரூ.22 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம். ஆனந்தன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 12:27 am

DIN

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியத்தில் ரூ.22 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம். ஆனந்தன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மாவட்ட கவுன்சிலா் நிதி ஒதுக்கீட்டின்கீழ் பொங்கலூா் ஒன்றியம் காட்டூா் ஊராட்சி கெங்கநாயக்கன்பாளையம், தொங்குட்டிபாளையம் ஊராட்சி குமாரபாளையம் மற்றும் பெருந்தொழுவில் கழிவு நீா் வடிகால் வசதி, காட்டூா் ராஜீவ் காலனி மற்றும் மாதப்பூா் ஊராட்சி தொட்டம்பட்டி பகுதிகளில் கான்கிரீட் தளம் அமைத்தல் ஆகியவை பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவா் அலகுமலை வி.எம்.சண்முகம், பொங்கலூா் ஒன்றிய முன்னாள் தலைவா் எஸ்.சிவாச்சலம், ஒன்றிய அதிமுக செயலாளா் காட்டூா் சிவபிரகாஷ், ஒன்றிய விவசாய அணி செயலாளா் சிதம்பரம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.