மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருமுருகன்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூ. பிரசாரம்: தடி ஊன்றி பங்கேற்ற திமுக மூத்த உறுப்பினர்

திருமுருகன்பூண்டி நகராட்சியில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, திமுக மூத்த உறுப்பினர் தடி ஊன்றி வந்து பங்கேற்றதால் அனைவர

News image
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் | திமுக மூத்த உறுப்பினர் அருணாசலம்
Updated On :15 பிப்ரவரி 2022, 8:46 am

DIN

அவிநாசி: திருமுருகன்பூண்டி நகராட்சியில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, திமுக மூத்த உறுப்பினர் தடி ஊன்றி வந்து பங்கேற்றதால் அனைவரும் மகிழ்ந்தனர்.

திருமுருகன்பூண்டி நகராட்சியில் திமுக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இராக்கியாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்ட மக்களவைத் தேர்தலில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து சட்டப் பேரவைத் தேர்தலில் அதிகப்படியான இடங்களில் வென்று, திமுக கூட்டணி ஆட்சியை பிடித்தது. தொடர்ந்து 9 மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், மகத்தான வெற்றி பெற்றது திமுக கூட்டணி.

இன்றைக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உண்மையிலேயே அதிமுக நண்பர்களே மனசாட்சியுடன் சொல்லுங்கள் நீங்கள் போட்டியிடுகிற வாய்ப்பு திமுக தலைவர் மு. க. ஸ்டாலினால் கிடைத்துள்ளது. ஆட்சி பொறுப் பேற்று 8 மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. 10ஆண்டுகால ஆட்சியில் அதிமுக அடித்த கொள்ளைக்கு அளவில்லை.

இதை அறப்போர் இயக்கம் என்ற சமூக அமைப்பு கூறியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் தண்டிக்கப்படுவார்கள்.  ஆகவே மக்கள் திமுக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினருக்கு வாக்களியுங்கள் என்றார்.

இப்பிரசாரம் துவங்கும் முன் 90 வயதுக்கு மேற்பட்ட திமுகவை சேர்ந்த மூத்த உறுப்பினர் அருணாசலம் தடி ஊன்றி வந்து பங்கேற்றார். அவருக்கு கதர் ஆடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.