திருப்பூரில் பிரபல நகைக்கடையில் சோதனை 

திருப்பூரில் உள்ள பிரபல நகைக்கடையில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூரில் பிரபல நகைக்கடையில் சோதனை 
Published on
Updated on
1 min read

திருப்பூர்: திருப்பூரில் உள்ள பிரபல நகைக்கடையில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு, கடைகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக திருப்பூர் குமரன் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையிலும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடையின் முன்பக்க கதவுகள் அடைக்கப்பட்டு ஊழியர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டு, அவர்களுடன் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடையில் உள்ள நகைகளின் இருப்பு விவரங்கள், ஆவணங்கள் உள்ளிட்ட பல தகவல்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com