திருப்பூரில் பிகார் இளைஞர் வெட்டிக்கொலை

திருப்பூரில் பிகார் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
திருப்பூரில் பிகார் இளைஞர் வெட்டிக்கொலை

திருப்பூரில் பிகார் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்டு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பவன் யாதவ் (27), திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பி.எம் காம்ப்ளக்ஸ், திருமலை நகர் முதல் வீதி, நெசவாளர் காலனி பகுதியில் வசித்து வந்தார். இவர் டெய்லர் வேலை செய்து வந்தார். அதே காம்ப்ளக்ஸில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உபேந்திரதாரி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 8 மணியளவில், உபேந்திரதாரி(50)யின் மனைவியுடன், பவன் யாதவ் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகப்பட்டு பவன் யாதவ் வீட்டிற்கு தட்டிக்கேட்க உபேந்திரதாரி சென்றுள்ளார். 

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியநிலையில் ஆத்திரமடைந்த உபேந்திரதாரி, பவன் யாதவை அரிவாளால் உடலில் சில இடங்களில் வெட்டியுள்ளார். இதில் பலத்த இரத்த காயமடைந்த பவன் யாதவை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு இரவு 11 மணியளவில் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பவன் யாதவை அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பலனின்றி திங்கள் கிழமை காலை உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த திருப்பூர் வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூரில் வட மாநில தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com