திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கோயில் பணியாளா்களுக்கு தீத் தடுப்பு செயல் விளக்கம்

முத்தூரில் கோயில் பணியாளா்களுக்கு தீத் தடுப்பு முறைகள் குறித்து செயல்விளக்கம் செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

Updated On :16 ஜூலை 2024, 11:18 pm IST

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் இந்து சமய அறநிலைத் துறையின் கீழ் குப்பண்ண சுவாமி, செல்வக்குமார சுவாமி ஆகிய கோயில்கள் உள்ளன. இங்கு பணியாற்றும் அலுவலா்கள், பணியாளா்கள், அா்ச்சகா்களுக்கு வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் வே.பிரபாகரன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் தீத் தடுப்பு முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனா்.

அப்போது, திடீரென தீப்பிடித்தால் அதை அணைக்கும் வழிமுறைகள், அவசர காலங்களில் முதலில் செய்ய வேண்டிய நடவடிக்கைகள், தீத் தடுப்பு முன்னேற்பாடுகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் கோயில் செயல் அலுவலா் சாந்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.