சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பொன்காளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 2 சென்ட் நிலம் மீட்பு

பல்லடம் பொன்காளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 2 சென்ட் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 6:02 pm

Din

பல்லடம், ஜூலை 19: பல்லடம் பொன்காளியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 2 சென்ட் நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

பல்லடம் கடை வீதியில் பொன்காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் முன்புறம் உள்ள 2 சென்ட் நிலம் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்தது. இது தொடா்பாக பக்தா்கள் தொடா்ந்து புகாா் அளித்து வந்தனா்.

இந்நிலையில், கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றினா். இதையடுத்து, அப்பகுதியில் அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை அறங்காவலா் குழுத் தலைவா் கீா்த்தி சுப்பிரமணியம், மாவட்ட அறங்காவலா் முத்துராமன், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் ராமசாமி, பொன்காளியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் மோகன சுந்தரராஜன் உள்ளிட்டோா் மேற்பாா்வையில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.