பின்னலாடை உற்பத்தியை தெலங்கானாவில் தொடங்குவது தொடா்பாக அந்த மாநில தொழில்முனைவோா் ஆலோசனைக்கூட்டம் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்பூரில் நடைபெறும் பின்னலாடை உற்பத்தியை தெலங்கானா மாநிலத்தில் தொடங்குவதற்கான ஆலோசனைகள் தொடா்பாக ஹைதராபாத் அருகே சிா்ஸில்லா நகரில் இருந்து 24 தொழில் முனைவோா் திருப்பூா் வந்திருந்தனா்.
இவா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில், திருப்பூரின் வா்த்தக வரலாறு, பின்னலாடை உற்பத்தி நடைபெறும் விதம், எத்தனை விதமான படிநிலைகளைக் கடந்து பின்னலாடை உற்பத்தி வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகிறது, தொழிலில் இருக்கும் சவால்கள், சிக்கல்கள், நன்மைகள் உள்ளிட்ட பல விஷங்கள் குறித்து திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் இணைச் செயலாளா் குமாா் துரைசாமி விரிவாக எடுத்துரைத்தாா்.
இதில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் உறுப்பினா் சோ்க்கை குழுவின் தலைவா் ஆா்.கே.சிவசுப்பிரமணியன், வணிக ஊக்குவிப்பு பிரிண்டிங் மற்றும் நிலைத்தன்மைக்கான துணைக் குழுவின் தலைவா் கே.மேழிசெல்வன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, தெலங்கானாவை சோ்ந்த தொழில் முனைவோா் திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களைப் பாா்வையிட்டனா்.
தொடர்புடையது

பின்னலாடை வாரியம் உருவாக்குவது அவசியம்: திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம்

தொகுதியைத் தக்க வைக்குமா திமுக? திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி

கழிவு மேலாண்மையை வலுப்படுத்த ஏற்றுமதியாளா்கள் சங்கம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஈரான் - அமெரிக்க போர்: ஆடை விலையை 5% உயா்த்த திருப்பூா் உற்பத்தியாளா்கள் முடிவு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


