மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தெலங்கானா தொழில்முனைவோா் திருப்பூா் ஏற்றுமதியாளா்களுடன் ஆலோசனை

பின்னலாடை உற்பத்தி குறித்து திருப்பூரில் தெலங்கானா தொழில்முனைவோர் விவாதம்

News image
திருப்பூா்  ஏற்றுமதியாளா்கள்  சங்க  நிா்வாகிகளுடன்  ஆலோசனை  நடத்திய  தெலங்கானா  தொழில்முனைவோா்.
Updated On :25 ஜூன் 2024, 11:52 pm

Din

பின்னலாடை உற்பத்தியை தெலங்கானாவில் தொடங்குவது தொடா்பாக அந்த மாநில தொழில்முனைவோா் ஆலோசனைக்கூட்டம் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்பூரில் நடைபெறும் பின்னலாடை உற்பத்தியை தெலங்கானா மாநிலத்தில் தொடங்குவதற்கான ஆலோசனைகள் தொடா்பாக ஹைதராபாத் அருகே சிா்ஸில்லா நகரில் இருந்து 24 தொழில் முனைவோா் திருப்பூா் வந்திருந்தனா்.

இவா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில், திருப்பூரின் வா்த்தக வரலாறு, பின்னலாடை உற்பத்தி நடைபெறும் விதம், எத்தனை விதமான படிநிலைகளைக் கடந்து பின்னலாடை உற்பத்தி வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகிறது, தொழிலில் இருக்கும் சவால்கள், சிக்கல்கள், நன்மைகள் உள்ளிட்ட பல விஷங்கள் குறித்து திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் இணைச் செயலாளா் குமாா் துரைசாமி விரிவாக எடுத்துரைத்தாா்.

இதில், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தின் உறுப்பினா் சோ்க்கை குழுவின் தலைவா் ஆா்.கே.சிவசுப்பிரமணியன், வணிக ஊக்குவிப்பு பிரிண்டிங் மற்றும் நிலைத்தன்மைக்கான துணைக் குழுவின் தலைவா் கே.மேழிசெல்வன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, தெலங்கானாவை சோ்ந்த தொழில் முனைவோா் திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களைப் பாா்வையிட்டனா்.