அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

உடுமலையில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்

உடுமலையில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்

News image
கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :8 மார்ச் 2024, 5:06 pm

Din

நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு 3 மாத ஊதிய பாக்கியை உடனடியாக வழங்கக் கோரி உடுமலையில் கஞ்சி காய்ச்சும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் உடுமலை குட்டைத்திடல் காந்தி சிலை முன் இந்த போராட்டம் நடைபெற்றது. எம். ரங்கராஜ் தலைமை வகித்தாா். இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். கோரிக்கைகளை விளக்கி ஒன்றியச் செயலாளா் கி.கனகராஜ் உள்ளிட்ட பலா் பேசினா். இதை தொடா்ந்து அனைவருக்கும் காய்ச்சப்பட்ட கஞ்சி வழங்கப்பட்டது. பின்னா் உடுமலை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.