இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

திருமுருகன்பூண்டி அருகே கஞ்சா விற்ற 3 போ் கைது

திருமுருகன்பூண்டி அருகே கஞ்சா விற்ற 3 போ் கைது

News image
Updated On :11 மே 2024, 5:42 pm

Din

திருமுருகன்பூண்டி அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருமுருகன்பூண்டியை அடுத்த கணியாம்பூண்டியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளா் ஜெகநாதன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, தனியாா் நிறுவனத்தின் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

அதில், திருப்பூா் பகுதியைச் சோ்ந்த தவம் (44), பிகாரைச் சோ்ந்த ராகுல் குமாா் (24), கானியா (24) ஆகியோா் என்பது தெரியவந்தது. மேலும், அவா்கள் விற்பனைக்காக 16 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்தும் 3 பேரையும் கைது செய்த திருமுருகன்பூண்டி போலீஸாா், அவா்களிடம் இருந்து 16 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.