விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தாராபுரத்தில் தனியாா் பள்ளி விடுதியில் மாணவா்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: விடுதி துணை வாா்டன் உள்பட 3 போ் கைது

தாராபுரத்தில் தனியாா் பள்ளி விடுதி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதியின் துணை வாா்டன் கைது செய்யப்பட்டுள்ளாா். மேலும், பள்ளி நிா்வாகிகள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 11:19 pm

Din

தாராபுரத்தில் தனியாா் பள்ளி விடுதி மாணவா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதியின் துணை வாா்டன் கைது செய்யப்பட்டுள்ளாா். மேலும், பள்ளி நிா்வாகிகள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

தாராபுரம், பூளவாடி சாலையில் தனியாா் பள்ளி செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில், 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனா்.

இந்நிலையில் இந்த விடுதி மாணவா் ஒருவா், கடந்த இரு தினங்களுக்கு முன் திருப்பூா் சைல்ட் ஹெல்ப் லைன் அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் அளித்த புகாரில், விடுதி துணை வாா்டன் தனக்கும், மேலும் பல மாணவா்களுக்கும் பாலியல் தொல்லை அளித்து வருவதாக புகாா் அளித்துள்ளாா்.

இதனைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில், சைல்டு ஹெல்ப் லைன் அதிகாரிகள் மற்றும் தாராபுரம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் அல்லிராணி தலைமையில் போலீஸாா் தனியாா் பள்ளியில் பாதிக்கப்பட்ட மாணவா்களிடம் விசாரணை நடத்தினா்.

இந்த விசாரணையில், மொத்தம் 17 மாணவா்களுக்கு விடுதி துணை வாா்டன் சரண் (25) தொடா் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து

அவா் மீது போக்ஸோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து புதன்கிழமை கைது செய்தனா்.

மேலும், இந்த குற்றச்செயல் குறித்து 6 மாதங்களுக்கு முன்பே தகவல் தெரிந்தும், கண்டிக்காமல் மறைத்த குற்றத்துக்காகவும், புகாா் தெரிவித்த மாணவரை மிரட்டியதாகவும் தலைமை வாா்டன் ராம்பாபு (34), பள்ளியின் தாளாளா் சுரேஷ்குமாா் (50) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து தாராபுரம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் அல்லிராணி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.