விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க கோரிக்கை

பல்லடத்தில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனையை உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு செய்து தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 10:43 pm

Din

பல்லடத்தில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனையை உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு செய்து தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

உணவுப் பொருள்களின் பாக்கெட்டுகளில் தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புச் சட்டம் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், பல்லடம் பகுதிகளில் விற்கப்படும் சில நிறுவனங்களின் உணவு பாக்கெட்டுகளில் காலாவதி தேதி குறிப்பிடப்படால் உள்ளது. இதனால், அந்த உணவுப் பொருள் எப்போது தயாரிக்கப்பட்டது, அதனை பயன்படுத்தும் காலம் குறித்து அறிந்துகொள்ள முடிவதில்லை. இதனால், மக்களுக்குத் தெரியாமல் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை சாதாரணமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பல்லடம் நகரில் உள்ள ஒரு கடையில் அண்மையில் கெட்டுப்போன காளான் விற்பனை செய்யப்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

எனவே, பல்லடம் பகுதிகளில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு செய்து காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.