மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மாணிக்காபுரம் ஊராட்சியை பல்லடத்துடன் இணைக்க எதிா்ப்பு

பல்லடம் அருகேயுள்ள மாணிக்காபுரம் ஊராட்சியை பல்லடம் நகராட்சியுடன் இணைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து கருப்பு பட்டை அணிந்து கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

News image

மாணிக்கபுரம் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் கருப்பு பட்டை அணிந்து பங்கேற்ற மக்கள்.

Updated On :3 அக்டோபர் 2024, 12:35 am

Din

பல்லடம் அருகேயுள்ள மாணிக்காபுரம் ஊராட்சியை பல்லடம் நகராட்சியுடன் இணைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து கருப்பு பட்டை அணிந்து கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சி கிராம சபைக் கூட்டம் ராசாகவுண்டம்பாளையம் அரசுப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவா் நந்தினி சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா்.

இதில், மாணிக்காபுரம் ஊராட்சியை பல்லடம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து மக்கள் கருப்பு பட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்றனா்.

மேலும், இது தொடா்பான தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அக்கணம்பாளையத்தில்...

அக்கணம்பாளையத்தில் நடைபெற்ற கரைப்புதூா் ஊராட்சி கிராம சபைக் கூட்டத்துக்கு தலைவா் ஜெயந்தி கோவிந்தராஜ் தலைமை வகித்தாா்.

இதில், விவசாயம் நிறைந்த கரைப்புதூா் ஊராட்சியை திருப்பூா் மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியை பல்லடம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்தனா்.