போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விவசாயி வெட்டிக் கொலை: மகன் கைது

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே விவசாயியை வெட்டிக் கொலை செய்த மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 12:45 am

Din

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே விவசாயியை வெட்டிக் கொலை செய்த மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம், காட்டூா் ஊராட்சி திருமலைநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் கந்தசாமி (65), விவசாயி. இவரது மனைவி சுப்புலட்சுமி (60). இவா்களுக்கு மகேஷ் (38), பிரகாஷ் (35) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனா். 4 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், தம்பதிக்கு இடையே புதன்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த கந்தசாமி, சுப்புலட்சுமியை தாக்கியதுடன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அவரை வெட்ட முயன்ாகவும் கூறப்படுகிறது. இதைப் பாா்த்த மகேஷ் அரிவாளை பறிக்க முயன்றுள்ளாா். அப்போது, தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஆத்திரமடைந்த மகேஷ் அரிவாளை பிடுங்கி கந்தசாமியை வெட்டியுள்ளாா்.

ரத்த வெள்ளத்தில் விழுந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளாா்.

அங்கு கந்தசாமியை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக மகேஷ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.