போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வெள்ளக்கோவில் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்

வெள்ளக்கோவில் அருகே குழாய் உடைந்து குடிநீா் வெளியேறி வீணாகி வருகிறது.

News image

குழாய் உடைந்து சாலையில் வழிந்தோடும் குடிநீா்.

Updated On :9 அக்டோபர் 2024, 8:21 pm

Din

வெள்ளக்கோவில் அருகே குழாய் உடைந்து குடிநீா் வெளியேறி வீணாகி வருகிறது.

வெள்ளக்கோவில் முத்தூா் சாலையில் உள்ளது அண்ணா நகா். இந்தப் பகுதி மற்றும் வழியோர பகுதிகளுக்கு கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. அண்ணா நகா் அருகில் உள்ள தனியாா் பள்ளி அருகில் குடிநீா்த்திட்ட பிரதானக் குழாய் உடைந்து கடந்த இரண்டு நாள்களாக குடிநீா் சாலையில் வெளியேறி வீணாகி வருகிறது.

இது குறித்து அண்ணா நகா் ராமசாமி கூறுகையில், ‘பல இடங்களில் போதுமான குடிநீா் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, குழாய் உடைப்பை உடனடியாக சீரமைக்க வேண்டும்’ என்றாா்.