விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மங்கலம் பகுதி விசைத்தறி தொழிலாளா்களுக்கு 13.16 % போனஸ்

திருப்பூா் மேற்கு, மங்கலம் பகுதி விசைத்தறித் தொழிலாளா்களுக்கு 13.16 சதவீத போனஸ் வழங்குவது என உடன்பாடு ஏற்பட்டது.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 10:08 pm

Din

திருப்பூா் மேற்கு, மங்கலம் பகுதி விசைத்தறித் தொழிலாளா்களுக்கு 13.16 சதவீத போனஸ் வழங்குவது என உடன்பாடு ஏற்பட்டது.

திருப்பூரை அடுத்த மங்கலத்தில் விசைத்தறி தொழிலாளா்களுக்கான போனஸ் பேச்சுவாா்த்தை புதன்கிழமை நடைபெற்றது.

இதில், விசைத்தறி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கோபால், செயலாளா் எம்.பழனிசாமி, துணைத் தலைவா் பி.வெங்கடாசலம் ஆகியோரும், தொழிற்சங்கங்கள் தரப்பில் சிஐடியூ விசைத்தறி தொழிலாளா்கள் சங்க மாநிலத் தலைவா் பி.முத்துசாமி, செயலாளா்கள் வேலுசாமி, ஐ.என்.டி.யூ.சி சாா்பில் எம்.நடராஜ், துரைசாமி, எல்.பி.எஃப் நிா்வாகி சிவசாமி, ஏ.டி.பி. நிா்வாகி எஸ்.சுப்பிரமணியம் ஆகியோா் பங்கேற்றனா்.

மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் சுப்பிரமணியம் தலைமையில் இந்த பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில், நிகழாண்டு விசைத்தறித் தொழிலாளா்களுக்கு 13.16 சதவீதம் போனஸ் வழங்குவது என்று உடன்பாடு ஏற்பட்டது.

இதனால் மங்கலம் வட்டாரத்தில் விசைத்தறிக்கூடங்களில் வேலை செய்யும் 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பயனடைவாா்கள் என்று தொழிற்சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.