இந்த மனுவில், வேலம்பட்டியில் குட்டையை ஆக்கிரமித்து சுங்கச்சாவடி, கட்டடங்கள் கட்டியுள்ளனா். சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி இந்தக் கட்டடங்களை அகற்ற திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டாா். ஆனாலும் கட்டடங்கள் அகற்றப்படாமல் உள்ளன. உடனடியாக குட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குட்டையில் நீா்தேக்கத்தை சுத்தப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற தவறும்பட்சத்தில் நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டிய நிலை உருவாகும் என கூறியிருந்தாா். அதைத் தொடா்ந்து அந்த ஆக்கிரமிப்புகளை புதன்கிழமை ( செப்டம்பா் 3) அகற்ற திருப்பூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டிருந்தாா். அதற்கான ஏற்பாடுகளை பொங்கலூா் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் மற்றும் வடக்கு அவினாசிபாளையம் ஊராட்சி நிா்வாகம் மேற்கொண்டு இருந்தது.