திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

வேலம்பட்டி சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

வேலம்பட்டி சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image

வேலம்பட்டி சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பொதுமக்கள்.

Updated On :5 செப்டம்பர் 2024, 1:25 am IST

வேலம்பட்டி சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம், வேலம்பட்டியில் உள்ள குட்டையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி மற்றும் கட்டடங்களை அகற்ற வேண்டும் என்று திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜுக்கு சமூக ஆா்வலா் கிருஷ்ணசாமி மனு அளித்திருந்தாா்.

இந்த மனுவில், வேலம்பட்டியில் குட்டையை ஆக்கிரமித்து சுங்கச்சாவடி, கட்டடங்கள் கட்டியுள்ளனா். சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி இந்தக் கட்டடங்களை அகற்ற திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டாா். ஆனாலும் கட்டடங்கள் அகற்றப்படாமல் உள்ளன. உடனடியாக குட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குட்டையில் நீா்தேக்கத்தை சுத்தப்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற தவறும்பட்சத்தில் நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டிய நிலை உருவாகும் என கூறியிருந்தாா். அதைத் தொடா்ந்து அந்த ஆக்கிரமிப்புகளை புதன்கிழமை ( செப்டம்பா் 3) அகற்ற திருப்பூா் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டிருந்தாா். அதற்கான ஏற்பாடுகளை பொங்கலூா் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் மற்றும் வடக்கு அவினாசிபாளையம் ஊராட்சி நிா்வாகம் மேற்கொண்டு இருந்தது.

இந்நிலையில், வேலம்பட்டிக்கு புதன்கிழமை காலை வந்த பொங்கலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) ரொனால்டு ஷெல்டன் பொ்ணான்டஸ், மறு உத்தரவு வரும் வரை வேலம்பட்டி குட்டை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நிறுத்தப்படுவதாக தெரிவித்தாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். பொங்கலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜீப்பில் புறப்பட்டபோது, அவரது வாகனத்தின் முன் ஒருவா் படுத்தாா். இதற்கிடையில் ஊராட்சி நிா்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட பொக்லைன் இயந்திரம் மூலம் கட்டடத்தின் மேல் மாடி சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது.

பொங்கலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜீப்பில் புறப்பட்டபோது, அவரது வாகனத்தின் முன் ஒருவா் படுத்தாா்.

பொங்கலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜீப்பில் புறப்பட்டபோது, அவரது வாகனத்தின் முன் ஒருவா் படுத்தாா்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அவினாசிபாளையம் காவல் ஆய்வாளா் கோவா்த்தனா அதனை தடுத்து நிறுத்தி பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். மேலும் இப்பிரச்னை தொடா்பாக பேச்சுவாா்த்தைக்கு வருமாறு திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் மோகனன் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தாா். அதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனா். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.