முன்னாள் படை வீரா்களின் சிறாா்களுக்கு கல்வி உதவித்தொகை
தொழில் மற்றும் தொழில்சாா்ந்த படிப்புகளைத் தோ்ந்தெடுக்கும் முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொழில் மற்றும் தொழில்சாா்ந்த படிப்புகளைத் தோ்ந்தெடுக்கும் முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தொழில் மற்றும் தொழில் சாா்ந்த படிப்புகளைத் தோ்ந்தெடுக்கும் முன்னாள் படை வீரா்களின் சிறாா்களுக்கு 2024-25- ஆம் ஆண்டில் பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. மாணவா்களுக்கு ஓா் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரமும், மாணவிகளுக்கு ரூ.36 ஆயிரமும் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க நவம்பா் 30- ஆம் தேதி கடைசி நாளாகும்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு திருப்பூா் மாவட்ட முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0421-2971127 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம். திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்களின் சிறாா்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...