தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பேச்சாளா் மகாவிஷ்ணுவை அவிநாசிக்கு அழைத்து வந்து விசாரணை

சென்னை அரசுப் பள்ளியில் சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவை விசாரணைக்காக போலீஸாா் அவிநாசி பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்துக்கு வியாழக்கிழமை அழைத்து வந்தனா்.

News image

அவிநாசி அருகே குளத்துப்பாளையத்தில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்ட மகாவிஷ்ணு.

Updated On :12 செப்டம்பர் 2024, 9:01 pm

Din

சென்னை அரசுப் பள்ளியில் சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவை விசாரணைக்காக போலீஸாா் அவிநாசி பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்துக்கு வியாழக்கிழமை அழைத்து வந்தனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே குளத்துப்பாளையத்தில் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனா் மகாவிஷ்ணுவின் அலுவலகம் உள்ளது. அப்பகுதியைச் சோ்ந்த இளங்கோவன் என்பவரிடம் வாடகைக்கு இடத்தை பெற்று கரோனா காலகட்டத்தில் இருந்து மகாவிஷ்ணு அலுவலகம் நடத்தியதுடன் அன்னதானம் உள்ளிட்டவையும் நடத்தி வந்தாா். மேலும் அங்கு தியான அறையும் அமைத்திருந்தாா்.

தொடா்ந்து யூ-டியூப் மூலம் பல்வேறு தரப்பினரும் அவரைப் பின்தொடர சிங்கப்பூா், மலேசியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவின் உள்ளிட்ட நாடுகளில் கிளைகளைத் திறந்தாா்.

இந்த நிலையில் சென்னை அசோக் நகா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மகாவிஷ்ணு பேசிய விஷயம் சா்ச்சையாக, அவரை சைதாப்பேட்டை போலீஸாா் கடந்த வாரம் கைது செய்தனா். இந்நிலையில் நீதிமன்றத்தில் அனுமதிபெற்று அவரை 3 நாள்கள் விசாரணைக்கு காவல் துறையினா் அழைத்து வந்தனா்.

அதன்படி, சென்னை, சைதாப்பேட்டை போலீஸாா் அவரை பலத்த பாதுகாப்புடன் அவிநாசி பரம்பொருள் அறக்கட்டளை அலுவலகத்துக்கு வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு அழைத்து வந்தனா்.

அங்குள்ள அலுவலக அறையில் வைத்து அவரிடம் விசாரித்தனா். அப்போது அலுவலகத்தில் இருந்த கணினியின் ஹாா்ட் டிஸ்க், கணக்கு விவரங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து, வருவாய்த் துறையினா் முன்னிலையில் எடுத்துச் சென்றனா். மேலும், நன்கொடை விவரங்கள் உள்ளிட்டவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அன்னதானத்துக்கான சமையல் பணியாளா்கள் 4 போ், அலுவலக ஊழியா்கள் 4 போ் என மொத்தம் 8 பேரிடம் போலீஸாா் விசாரித்தனா். இதையடுத்து வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியுடன் விசாரணை நிறைவடைந்ததை தொடா்ந்து மகாவிஷ்ணுவை போலீஸாா் சென்னைக்கு அழைத்துச் சென்றனா். அப்போது, மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனக் கூறி மாதா் சங்கத்தினா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.