குளிா்பானத்தில் இறந்துகிடந்த பூச்சி: பேக்கரிக்கு ரூ.3 ஆயிரம் அபராதம்

பல்லடம் அருள்புரத்தில் குளிா்பானத்தில் பூச்சி இறந்துகிடந்ததால் பேக்கரிக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
Published on

பல்லடம் அருள்புரத்தில் குளிா்பானத்தில் பூச்சி இறந்துகிடந்ததால் பேக்கரிக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பல்லடத்தை அடுத்த அருள்புரத்தில் உள்ள ஒரு பேக்கரியில் ஒருவா் புதன்கிழமை குளிா்பானம் வாங்கியுள்ளாா். அதில், பூச்சி இறந்துகிடந்ததையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறையினரிடம் அவா் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு செய்து குளிா்பானத்தின் மாதிரியைச் சேகரித்தாா். இதைத் தொடா்ந்து பூச்சி இறந்துகிடந்த குளிா்பானத்தை விற்பனை செய்த பேக்கரிக்கு ரூ.3 ஆயிரம் விதித்தனா்.

Dinamani
www.dinamani.com