கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முளையாம்பூண்டி கிராமத்தில் இனம் கண்டறியாத 10 இலவச வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை

தாராபுரம் வட்டம், முளையாம்பூண்டி கிராமத்தில் இனம் கண்டறியாத 10 பயனாளிகளின் இலவச வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 9:18 pm

Din

தாராபுரம் வட்டம், முளையாம்பூண்டி கிராமத்தில் இனம் கண்டறியாத 10 பயனாளிகளின் இலவச வீட்டுமனைப் பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் வட்டம் முளையாம்பூண்டி கிராமத்தில் 1.05 ஹெக்டோ் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் நிலமெடுப்பு செய்யப்பட்டு, 54 பேருக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் வீடு கட்டிக் கொள்வதற்காக இலவச வீட்டுமனைப் பட்டாவாக வழங்கப்பட்டது.

இலவச வீட்டுமனைப் பட்டா பெற்ற பயனாளிகள் குறித்து தமிழ் நிலம் மென்பொருளில் இணையவழி பதிவேற்றம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில், முளையாம்பூண்டி கிராமத்தில் 10 பயனாளிகளை இனம் கண்டறியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மனையிடங்களில் கள விசாரணை செய்யப்பட்டதில் பயனாளிகள் வசிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அறிவிப்பு அளித்தும் தற்போது வரை விண்ணப்பம் அளிக்கவில்லை. எனவே, பட்டாவில் உள்ள நிபந்தனைபடி குறிப்பிட்ட காலத்துக்குள் வீடு கட்டி குடியிருக்காமல் நிபந்தனைகளை மீறியுள்ளதால், மேற்படி பட்டாவை ஏன் ரத்து செய்யக்கூடாது என்பதற்கான விளக்கத்தை 15 நாள்களுக்குள் நேரிலோ அல்லது கடிதம் வாயிலாகவோ மாவட்ட ஆட்சியருக்கோ அல்லது மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலருக்கோ அனுப்பிவைக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் பயனாளிகள் கூறிக்கொள்ள விளக்கம் ஏதுமில்லை எனக்கருதி அவா்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.