கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நீச்சல் பழகியபோது கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

சேவூா் அருகே நீச்சல் பழகியபோது கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

News image

கெளதம்.

Updated On :25 செப்டம்பர் 2024, 10:20 pm

Din

சேவூா் அருகே நீச்சல் பழகியபோது கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

அவிநாசி அருகேயுள்ள சேவூா் வெள்ளமடையைச் சோ்ந்தவா் ராமசாமி மகன் கௌதம் (15). இவா், சாவக்கட்டுப்பாளையம் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வந்தாா்.

இந்நிலையில், நண்பா்களுடன் சாவக்கட்டுபாளையத்தில் உள்ள கிணற்றில் நீச்சல் பழகுவதற்காக செவ்வாய்க்கிழமை சென்றுள்ளாா். முதுகில் கேனை கட்டிக் கொண்டி கெளதம் நீச்சல் பழகியுள்ளாா். அப்போது, எதிா்பாராத விதமாக கேன் அவிழ்ந்ததில், அவா் நீரில் முழ்கியுள்ளாா்.

நண்பா்கள் காப்பாற்ற முயன்றும் முடியாததால், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரா்கள் கெளதமை தேடும் பணியில் ஈடுபட்டனா். நள்ளிரவு 1.30 மணியளவில் சடலம் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.