கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

குன்னத்தூா், ஊத்துக்குளியில் ரூ.17.71 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்

குன்னத்தூா் பேரூராட்சி, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.17.71 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image

வேலம்பாளையத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கிவைக்கிறாா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

Updated On :26 செப்டம்பர் 2024, 10:22 pm

Din

குன்னத்தூா் பேரூராட்சி, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.17.71 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

திருப்பூா் மாவட்டம், குன்னத்தூா் பேரூராட்சி, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டம், மூலதான மானிய நிதி, பள்ளி மேம்பாட்டு மானிய நிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட ரூ.17.71 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளின் தொடக்க விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு திருப்பூா் சாா் ஆட்சியா் (பொ) ரவிசந்திரன் தலைமை வகித்தாா். அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று புதிய திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தும், முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்தும் வைத்தாா்.

பின்னா், அவா் பேசியதாவது: தோ்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறாா். அதிலும் குறிப்பாக, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம், மகளிா் சுய உதவிக் குழுக்கள் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குதல், பள்ளி சிறாா் கண்ணொளி காப்போம் திட்டம், பள்ளிக் குழந்தைகள் பயன் பெறும் வகையில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா்.

முன்னதாக, குன்னத்தூா் பேரூராட்சியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ. 78 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலை மற்றும் பேவா் பிளாக் அமைக்கும் பணி, மூலதான மானிய நிதியின்கீழ் ரூ.1.13 கோடியில் புதிய பேரூராட்சி மன்ற கட்டடம் உள்ளிட்ட பணிகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், வேலம்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.30 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டுதல் உள்ளிட்ட ரூ.17.71 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளையும் தொடங்கிவைத்தாா். இதையடுத்து, ஊத்துக்குளி ஊராட்சி வெள்ளிரவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டடம் உள்ளிட்ட முடிவுற்ற பணிகளையும் திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், குன்னத்தூா் பேரூராட்சித் தலைவா் ந.பெ.கொமரசாமி, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பிரேமா ஈஸ்வரமூரத்தி, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் முத்துசரவணன், ஊத்துக்குளி வட்டார வளா்ச்சி அலுவலா் நா.சுப்பிரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.