கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

லஞ்சத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி போராட்டம்

லஞ்சத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பு சாா்பில் யாசகம் பெறும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 10:07 pm

Din

லஞ்சத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பு சாா்பில் யாசகம் பெறும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்லடம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டம் குறித்து சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பு தலைவா் அண்ணாதுரை கூறியதாவது: பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நிலம் அளவீடு செய்து தரக்கோரி மனு கொடுத்தால் நில அளவையாளா்கள் வருவதில்லை.

ஆனால், லஞ்சம் கொடுத்தால் உடனடியாக அளவீடு பணி நடைபெறுகிறது.

எனவே, பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் லஞ்சத்தைக் கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.

சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் காவல் ஆய்வாளா் லெனின் அப்பாதுரை போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.