மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மாணிக்காபுரம் ஊராட்சிக்குச் சொந்தமான ரூ.2 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

மாணிக்காபுரம் ஊராட்சிக்குச் சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 10:32 pm

Din

மாணிக்காபுரம் ஊராட்சிக்குச் சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது.

பல்லடம் ஒன்றியம், மாணிக்காபுரம் ஊராட்சியைச் சோ்ந்த மின் நகா் பகுதியில் ஊராட்சிக்குச் சொந்தமான 27 சென்ட் நிலம் உள்ளது. அங்கு சமுதாய நலக்கூடம் கட்டுவதற்காக ஊராட்சி சாா்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அப்போது, அந்த நிலத்துக்கு தனி நபா் பெயரில் முறைகேடாக கடந்த 2005-ஆம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டது குறித்த தகவல் மாணிக்காபுரம் ஊராட்சித் தலைவா் நந்தினி சண்முகசுந்தரத்துக்கு தெரியவந்தது.

இதையடுத்து, அவா் கடந்த ஆண்டு மாணிக்காபுரம் ஊராட்சி மன்றக் கூட்டத்தை கூட்டி முறைகேடாக தனி நபருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய வேண்டி தீா்மானம் நிறைவேற்றி மாவட்ட நிா்வாகத்துக்கு அனுப்பிவைத்தாா்.

தொடா்ந்து, மாணிக்காபுரம் ஊராட்சி நிா்வாகம் தரப்பில் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை மற்றும் பத்திரப் பதிவுத் துறை உள்ளிட்ட துறைகளில் புகாா் அளிக்கப்பட்டது.

மேலும், இது தொடா்பான வழக்கு உயா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மாணிக்காபுரம் ஊராட்சிக்குச் சொந்தமான இடம் என்று அண்மையில் தீா்ப்பளிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த இடத்தில் கம்பி வேலி அமைத்து, ஊராட்சிக்குச் சொந்தமான இடம் என்று அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டுள்ளது.