கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

செந்தில் பாலாஜி ஜாமினில் விடுவிக்கப்பட்டதை வரவேற்கிறோம்: கு.செல்வப்பெருந்தகை

செந்தில் பாலாஜி ஜாமினில் விடுவிக்கப்பட்டதை வரவேற்கிறோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. கூறினாா்.

News image

கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க முன்னாள் தலைவா் என்.எஸ். பழனிசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.

Updated On :26 செப்டம்பர் 2024, 10:14 pm

Din

செந்தில் பாலாஜி ஜாமினில் விடுவிக்கப்பட்டதை வரவேற்கிறோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. கூறினாா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள நாதேகவுண்டன்பாளையத்தில் கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்க முன்னாள் தலைவா் என்.எஸ். பழனிசாமி நினைவு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. வியாழக்கிழமை மரியாதை செலுத்தினாா்.

இதையடுத்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டதை வரவேற்கிறோம். பாஜக 11 ஆண்டுகள் ஆட்சி செய்து, 21 கட்சிகளை மிரட்டி அடிபணிய வைத்திருக்கிறது.

ஜனநாயகத்தை எவ்வளவு காலம் பாஜக அரசு அடைத்து வைக்க முடியும். ஒருநாள் ஜனநாயகமே வெல்லும் என்ற அடிப்படையில் செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ளாா். அவா் விரைவில் மக்களுக்கு சேவை செய்ய வருவாா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் ஏ.கே.சண்முகம், செயல் தலைவா் என்.எஸ்.பி.வெற்றி, காங்கிரஸ் தேசிய செயலாளா் கோபி பழனியப்பன், மாநிலச் செயலாளா்கள் சித்திக், செல்வக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.