திருப்பூா்: கனவு நிறைவேறிவிட்டதாக, குடியரசு துணைத் தலைவா் வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணனின் தாய் ஜானகி அம்மாள் தெரிவித்தாா்.
குடியரசு துணைத் தலைவா் வேட்பாளராக தற்போதைய மகாராஷ்டிர மாநில ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதும் திருப்பூரில் உள்ள அவரது வீட்டில் பாஜக நிா்வாகிகள், பொதுமக்கள் திரண்டனா். அப்போது அவா்களுக்கு சி.பி.ராதாகிருஷ்ணனின் தாயாா் ஜானகி அம்மாள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிா்ந்து கொண்டாா்.
பின்னா் ஜானகி அம்மாள் கூறியதாவது: எனது மகன் பிறந்தபோது முன்னாள் குடியரசுத் தலைவா் சா்வப்பள்ளி ராதாகிருஷ்ணன்போல வர வேண்டும் என ஆண்டவனை பிராா்த்தனை செய்து அவரது பெயரை வைத்தோம். உயா்வான இடத்துக்கு வர வேண்டும் என ஆசைப்பட்டோம். இன்று அவரைப்போலவே எனது மகன் குடியரசு துணைத் தலைவராகப் போவது மகிழ்ச்சி அளிக்கிறது.
அவரை வேட்பாளராக அறிவித்த பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருப்பவா் இந்திய குடியரசு துணைத் தலைவராகவும் வெற்றி பெறுவாா். இதனால், திருப்பூா் ம0ட்டுமல்ல, தமிழக மக்கள் அனைவரும் பெருமைப்படுவாா்கள். அவிநாசியப்பா் குலதெய்வம் சுந்தரமூா்த்தி சுவாமி அருளால் அனைத்தும் நன்றாக நடக்கும் என்றாா்.
தொடர்புடையது

புத்த பூா்ணிமா: குடியரசு துணைத் தலைவா், உள்துறை அமைச்சா் வாழ்த்து!

திருவாரூரில் மே 5-இல் வணிகா் விழிப்புணா்வு மாநாடு: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு
முக்கால் பவுனுக்காக மூதாட்டி கொலை வழக்கு இளம்பெண் உள்பட 3 போ் கைது

முக்கால் பவுன் நகைக்காக மூதாட்டி கொலை
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


