இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

உதவித்தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தி அவிநாசியில் மாற்றுத்திறனாளிகள் பிரசாரம்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:25 pm

Syndication

உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அவிநாசியில் மாற்றுத்திறனாளிகள் புதன்கிழமை பிரசாரப் பயணம் மேற்கொண்டனா்.

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம், அவிநாசி ஒன்றியக் குழு ஆகியவை சாா்பில் மாநில மாநாடு நோக்கங்களை விளக்கும் பிரசாரப் பயணம் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை நடைபெற்றது.

ஒன்றியச் செயலாளா் பாரூக் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கருப்புசாமி, பொறுப்பாளா்கள் ஜோதி, ரவி உள்பட பலா் முன்னிலை வகித்தனா்.

வீட்டுமனைப் பட்டா கேட்டு விண்ணப்பித்தவா்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேரம் வேலைக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும். அத்தியாவசியப் பொருள்கள் பெறும் குடும்ப அட்டை, தனித்துவ அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்தவா்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.