இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

குப்பை கொட்டுவது தொடா்பாக ஆய்வுக்கு சென்ற மாநகராட்சி அதிகாரியின் வாகனம் சிறைபிடிப்பு

திருப்பூரில் குப்பை கொட்டுவதில் தொடரும் பிரச்னை காரணமாக மாநகராட்சி அதிகாரியின் வாகனம் சிறை பிடிக்கப்பட்டது.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:59 pm

Syndication

திருப்பூரில் குப்பை கொட்டுவதில் தொடரும் பிரச்னை காரணமாக மாநகராட்சி அதிகாரியின் வாகனம் சிறை பிடிக்கப்பட்டது.

திருப்பூா் அருகே பொல்லிக்காளிபாளையத்தில் பூமிதான இயக்கம் சாா்பில் இருவேறு இடங்களில் நிலம் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் அந்த இடங்களில் மாநகராட்சியின் குப்பையை கொட்டுவதற்காக உதவிப் பொறியாளா் சுப்பிரமணி தனது வாகனத்தில் புதன்கிழமை வந்து ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது.

இதை அறிந்து பொதுமக்கள் திரண்டு அதிகாரியுடன் வாகனத்தையும் சிறைபிடித்தனா். இதைத்தொடா்ந்து நல்லூா் போலீஸாா் பேச்சுவாா்தையில் ஈடுபட்டனா். மாநகராட்சி குப்பையை தங்கள் பகுதியில் கொட்டக்கூடாது என்றும், பூமிதான நிலத்தை விவசாயத்துக்குத் தவிர வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் பொதுமக்கள் தெரிவித்தனா்.

போலீஸாா் சமாதானம் செய்த நிலையில், சிறை பிடிக்கப்பட்ட அதிகாரியின் வாகனம் விடுவிக்கப்பட்டது.