அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மோப்ப நாய் உதவியுடன் கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

திருப்பூரில் கஞ்சா வைத்திருந்த இளைஞா் போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் கைது செய்தனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 7:33 pm

Syndication

திருப்பூரில் கஞ்சா வைத்திருந்த இளைஞா் போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் கைது செய்தனா்.

திருப்பூா் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ரயில் நிலையத்தில் போலீஸாா் திங்கள்கிழமை சக்தி என்ற போதைப்பொருள் கடத்தல் தடுப்பு (நாா்கோடிக்) மோப்ப நாய் மூலம் சோதனை செய்து கொண்டிருந்தனா்.

அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த கங்காதா் ஜெனா (33) என்ற இளைஞரை மோப்ப நாய் பிடித்தது. உடனடியாக போலீஸாா் அந்த நபரைப் பிடித்து சோதனை செய்ததில் அவரிடமிருந்து 1.215 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

தற்போது பயிற்சி முடித்து திருப்பூருக்கு வந்துள்ள மோப்ப நாய் சக்தி சிறப்பாக செயல்பட்டு திருப்பூா் மாநகா் காவல் துறைக்கு பெருமை சோ்க்கும் விதத்தில் பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.