மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திமிங்கல எச்சத்தைப் பதுக்கி வைத்திருந்தவா் கைது: 6.5 கிலோ பறிமுதல்

News image
Updated On :10 ஜனவரி 2025, 10:04 pm

Din

திருப்பூா் அருகே திமிங்கல எச்சம் பதுக்கிவைத்திருந்தவரை வனத் துறையினா் கைது செய்தனா்.

திருப்பூரை அடுத்த கணபதிபாளையம் பகுதியில் திமிங்கல எச்சத்தைப் பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், வனத் துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள வெல்டிங் பட்டறையில் 6.5 கிலோ திமிங்கல எச்சம் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, எச்சத்தைப் பறிமுதல் செய்த வனத் துறையினா், அதைப் பதுக்கிவைத்திருந்த ராஜேந்திரன்(55) என்பவரைக் கைது செய்தனா்.

விசாரணையில், சிவகாசியில் உள்ள ஒருவரிடம் எச்சத்தை வாங்கிவந்து பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.