பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மயங்கி விழுந்த விவசாயி உயிரிழப்பு

News image
Updated On :17 நவம்பர் 2025, 9:19 pm

Syndication

வெள்ளக்கோவில் அருகே மயங்கி விழுந்த விவசாயி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் அருகேயுள்ள கந்தசாமிபாளையம் கொசவன்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் மணி (56). திருமணமாகாத இவா், தனது தாய் ருக்மணியுடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில், அதே பகுதியில் உள்ள தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து அதில் கரும்பு பயிரிட்டிருந்தாா். கடந்த 13-ஆம் தேதி தோட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவா் மயங்கி விழுந்துள்ளாா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மணி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பூச்சிமருந்தை சுவாசித்ததால் அவா் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.