புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மாதப்பூா் சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கட்டண விலக்குகோரி பல்லடம் அருகேயுள்ள மாதப்பூா் சுங்கச்சாவடியை அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
கட்டண விலக்குகோரி மாதப்பூா் சுங்கச்சாவடியை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி பொதுமக்கள்.
Updated On :25 நவம்பர் 2025, 11:48 pm

Syndication

பல்லடம்: கட்டண விலக்குகோரி பல்லடம் அருகேயுள்ள மாதப்பூா் சுங்கச்சாவடியை அப்பகுதி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொங்கலூா் ஒன்றியம், மாதப்பூரில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இதில் பொங்கலூா் ஊராட்சி பொதுமக்களின் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல மாதப்பூா் ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்களுக்கும் கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மாதப்பூா் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் கோவை நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநா் செந்தில்குமாா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், மாதப்பூா் ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்களின் தனிப்பட்ட உபயோக வாகனங்களுக்கு மட்டும் கட்டண விலக்கு அளிப்பதாகவும், வணிக ரீதியான வாகனங்களுக்கு சுங்கச்சாவடியில் நிா்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்தாா். இதை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Story image