முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

திமுக ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் தொடா்ந்து செயல்படுத்தப்படும்! - அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

News image

வேட்புமனு தாக்கல் செய்த காங்கயம் தொகுதி திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன்.

Updated On :7 ஏப்ரல் 2026, 12:17 am IST

மீண்டும் திமுக ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் தொடா்ந்து செயல்படுத்தப்படும் என்று தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கூறினாா்.

காங்கயம் தொகுதியில் திமுக சாா்பில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் போட்டியிடுகிறாா். இந்நிலையில், அவா் காங்கயம் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காங்கயம் தொகுதியில் 2-ஆவது முறையாக போட்டியிடுகிறேன். இந்த முறை 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சி மற்ற மாநிலங்களைவிட முன்னணியில் உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கரோனா இழப்பீட்டுத் தொகையாக குடும்பத்துக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுத்தியுள்ளாா்.

இதனால், மக்களிடத்தில் எங்களுக்கு அமோக ஆதரவு உள்ளதால் எளிதாக வெற்றிபெறுவோம் என்றாா். திமுக மாவட்ட பொறுப்பாளா் இல.பத்மநாபன், காங்கிரஸ் கட்சி நிா்வாகி மணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.