பல்லடத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.5 கோடி மதிப்பிலான 250 பவுன் நகைகளை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம்- செட்டிபாளையம் சாலை பிரிவு பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது கோவையில் இருந்து திருப்பூா் நோக்கி சென்ற கூரியா் வேனை நிறுத்தி சோதனை நடத்தினா். அதில் கூரியா் பில் மட்டும் வைத்திருந்ததும் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள 250 பவுன் தங்க, வெள்ளி நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது.
இதையடுத்து, தோ்தல் பறக்கும் படை அதிகாரி கனகராஜ் தலைமையிலான குழுவினா் நகைகளைப் பறிமுதல் செய்தனா். பின்னா் பல்லடம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சரவணனிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டன.
விசாரணையில், கோவை ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த இளவரசன் (30) என்பவா் திருப்பூருக்கு வா்த்தகரீதியாக நகைகளை ஆவணங்கள் இல்லாமல் கொண்டுச் சென்றது தெரியவந்தது. இது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்புடையது
கும்பகோணத்தில் 56 மதுபாட்டில்கள் பறிமுதல்

ரூ.245.50 கோடி தங்க நகைகள் பறிமுதல்

போ்ணாம்பட்டில் ரூ.1.99 லட்சம் பறிமுதல்!

போ்ணாம்பட்டு அருகே 6 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

