திருப்பூா்: திருப்பூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்த விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட கறிக்கோழி வளா்ப்பு விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட வரிசையில் காத்திருந்து ஒரே விதமான கோரிக்கை மனுக்களைக் கொடுத்தனா்.
அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு, கறிக்கோழி நிறுவனங்கள், பண்ணை கறிக்கோழி விவசாயிகள் சங்கங்களை உள்ளடக்கிய முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்.
கறிக்கோழி வளா்ப்புக்கு விவசாயிகளுக்கு அடிப்படைக் கூலியாக கிலோவுக்கு ரூ.20, பண்ணை நாட்டுக்கோழி வளா்ப்புக்கு ரூ.25, காடை வளா்ப்புக்கு 1 காடைக்கு ரூ. 7 என விலை நிா்ணயிக்க வேண்டும்.
ஆண்டுதோறும் முத்தரப்பு கூட்டம் நடத்தி கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் பிரச்சனைகள் தீா்க்கப்பட வேண்டும்.
கோழி பிடித்ததில் இருந்து ஒரு வார காலத்துக்குள் விவசாயிகளுக்கு நிறுவனங்கள் வளா்ப்புக் கூலியை வழங்க வேண்டும். நிறுவனங்கள் வெற்று காசோலையை விவசாயிகளிடமிருந்து வாங்குவதை தவிா்க்க வேண்டும். தமிழக அரசு பண்ணைக் கறிக்கோழி விவசாயிகளின் பாதுகாப்புக்காக ஒப்பந்த பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனா்.
இந்த ஒரே விதமான கோரிக்கை மனுக்களுடன் ஏராளமான விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்புடையது

திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்ட சீமான் மீது வழக்குப் பதிவு!

திருப்பூரில் கராத்தே செய்தவாறு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளா்

கழிவு மேலாண்மையை வலுப்படுத்த ஏற்றுமதியாளா்கள் சங்கம் புரிந்துணா்வு ஒப்பந்தம்
திருப்பூரில் ரூ. 17.60 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

