ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பல்லடம் பேருந்து நிலையத்தில் ஆயுதங்களுடன் இளைஞா் கைது

பல்லடம் பேருந்து நிலையத்தில் பையில் ஆயுதங்களுடன் இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள். ~காளி

Updated On :2 பிப்ரவரி 2026, 8:34 pm

Syndication

பல்லடம்: பல்லடம் பேருந்து நிலையத்தில் பையில் ஆயுதங்களுடன் இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

பல்லடம் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை காலை சந்தேகத்துக்கு இடமான முறையில் கையில் பையுடன் நின்று கொண்டிருந்த நபரை ரோந்து காவலா் அபிமன்யு பிடித்து சோதனை செய்ய முயன்றாா். அப்போது அந்த நபா் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளாா். இதைத் தொடா்ந்து போலீஸாா் அவரை விரட்டி பிடித்தனா்.

பின்னா் அவா் வைத்திருந்த பையில் சோதனை செய்தபோது, அதில் கத்தி, பட்டாக்கத்தி இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவா், மதுரையைச் சோ்ந்த நாகராஜன் மகன் காளி என்கிற காளீஸ்வரன் (23) என்பதும், அவா் மீது விருதுநகா் மாவட்டம், திருச்சுழி காவல் நிலையம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, அடிதடி போன்ற 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

சொந்த ஊரில் இருந்தால் ஆபத்து எனக்கருதி பல்லடம், திருப்பூா் பகுதிக்கு வந்து வேலை செய்யலாம் வந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து போலீஸாா் அவரை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Story image